வேண்டாதவர்கள் வதந்தி பரப்புகிறார்கள் - குஷ்பு

நடிகை குஷ்பு திமுகவில் சேர்ந்தபோது எந்த அளவுக்கு கிராக்கி இருந்தது தற்போது அந்த நிலை இல்லை. வேண்டாத விருந்தாளியாக பார்க்கப்படுகிறார் கட்சியினரால். இருப்பினும் அவரை கட்சியிலிருந்து நீக்காமல் தொடர்ந்து வைத்திருக்கிறது தலைமை.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குறித்து அவர் அளித்த பேட்டி திமுகவில் பெரும் புயலைக் கிளப்பியது. இதனால் அவரது வீடு கல்வீச்சுக்குள்ளனது. அவரும் தாக்கப்பட்டார். இதை திமுக தலைவர் கருணாநிதி கடுமையாக கண்டித்தார். உடனே இதுவும் சர்ச்சையானது.
இந்த நிலையில் குஷ்பு காங்கிரஸில் சேரப் போவதாகவும், அவர் சிரஞ்சீவியைப் பார்த்து இதுதொடர்பாக பேசியுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. சிரஞ்சீவியை குஷ்பு சந்தித்ததால் எழுந்த பேச்சு இது.
ஆனால் இது குஷ்பு மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தி.மு.க.வில்தான் இருக்கிறேன். தி.மு.க.வில்தான் தொடர்ந்து இருப்பேன். காங்கிரசில் சேரப்போவதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது. எனக்கு எதிராக வேண்டாதவர்கள் நிறைய வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள். அந்த வதந்திகளில் இதுவும் ஒன்று என்றார் அவர்.












Click it and Unblock the Notifications