Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர்- சோனியா படத்தை எரித்தால் பொறுக்க மாட்டோம், சும்மா இருக்க மாட்டோம்: ஈ.வி.கே.எஸ்

Subscribe to Oneindia Tamil

Don't tease congressmen: EVKS Elangovan
ஈரோடு: பிரதமர் மன்மோகன் சிங், அன்னை சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் படத்தை எரித்தாலோ பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது, பொறுக்க முடியாது என்று காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

கோபி கச்சேரிமேடு பகுதியில் காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அதில் இளங்கோவன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி பேசுகையில்,

இந்த இடம் நடிகர் சிவாஜி மற்றும் காங்கிரஸ் தொண்டர்களின் உழைப்பில் வாங்கிய இடம். இதுபோன்று தொண்டர்களின் சேமிப்பில் வாங்கிய இடம் தமிழகம் முழுவதும் உள்ளது. ஆனால் இந்த காலத்தை போலறு மக்களிடம் பல கோடி வசூலித்து நாம் கட்சிக்கு இடம் வாங்கவில்லை.

காங்கிரசில் கோஷ்டி பூசல் இருக்கும். ஆனால் அது காங்கிரசின் வெற்றியை பாதிக்காது.

இந்தியாவை அதிக ஆண்டுகள் ஆண்ட கட்சி காங்கிரஸ் தான். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ்தான் வெற்றி பெறும். இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி நல்லது செய்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் மக்கள் அதனை புரிந்து கொள்வார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரசும், மத்திய அரசும் செய்த நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்.

இந்த பிரச்சனையில் காங்கிரசார் அமைதி காக்கிறார்கள். ஆனால் கட்சி கொடி எரித்தாலோ, பிரதமர் மன்மோகன் சிங், அன்னை சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் படத்தை எரித்தாலோ பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. பொறுக்க முடியாது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+