பெண்கள்தான் நாட்டின் பொருளாதார முன்னேற்ற சக்தி: நரேந்திர மோடி புகழாரம்

Subscribe to Oneindia Tamil

Narendra Modi
டெல்லி: பெண்களின் சக்தியால்தான் நாட்டில் வளர்ச்சி ஏற்படும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் (பிக்கி) பெண்கள் அமைப்பின் சார்பில் நேற்று டெல்லியில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் குஜராத் முதல்வர் மோடி கலந்துகொண்டார். விழாவில் அவர் பெண்களைக் குறித்து கூறும் பொழுது, ‘பல தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களை பெண்கள் நடத்தி வருகின்றனர். பெண்கள் முடிவு எடுக்கும் நிலையில் இருந்தால் சமூக பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக விளங்குவார்கள்.

பெண்கள் சக்திதான் நாட்டின் எதிர்காலத்தை மாற்றும். பெண் சிசு கொலை, பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். குஜராத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் வீடுகள், அந்தந்த குடும்பத்தின் மூத்த பெண் உறுப்பினர் பெயரில் பத்திரப்பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிராம அளவில் உள்ள பஞ்சாயத்துகளில், பெண் தலைவருக்கு இதுபோன்ற லட்சியம் இருக்குமேயானால், நிச்சயம் ஒருநாள், நம்நாட்டில் வறுமை ஒழிந்தே தீரும். குஜராத்தில் மிக முக்கிய தொழில் முனைவோர்களாக, பல பெண்கள் உள்ளனர்.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

அதேபோல பள்ளி ஆவணங்களில் தாயின் பெயரை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் பெண்கள் மீதான பிற்போக்கான மனநிலை மாறும். தொழில் நிறுவனங்கள் பெண்களை தலைமை பொறுப்புகளில் நியமிக்க வேண்டும்.

அவர்கள் தனித்தன்மையான உத்திகளை வகுத்து செயல்படுவார்கள். சுய தொழில் செய்து வெற்றி பெற்ற பெண்களின் வெற்றிக் கதைகளை பிக்கி பெண்கள் அமைப்பு விளம்பரப்படுத்த வேண்டும். இதனால் பல பெண்களும் சாதனை செய்ய தூண்டப்படுவார்கள், என இவ்வாறு மோடி பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+