சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஹைகோர்ட்டில் மனு

சட்டசபையில் அவை நடவடிக்கையின் போது எம்.எல்.ஏ. மைக் கேல் ராயப்பனை தாக்கியதாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், பார்த்தசாரதி, நல்லதம்பி, அனகை முருகேசன், அருள் செல்வன், செந்தில் குமார் ஆகிய 6 பேரையும் 1 வருடம் சஸ்பெண்டு செய்து சபா நாயகர் தனபால் உத்தரவிட்டார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து அது 6 மாதமாக குறைக்கப்பட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து 6 பேரும் எம்.எல்.ஏ.க்களுக்குரிய சலுகைகளை பெற முடியாது.
இந்தநிலையில் சபாநாயகர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சந்திரகுமார் உள்பட 6 பேரும் இன்று மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில், சட்டசபையில் நடந்த சம்பவத்தை வீடியோ காட்சிகளை முழுமையாக பாராமல் சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications