6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- 40 வயது காமுகன் கைது!
சேலம்: சேலம் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்ததரவு கொடுத்ததாக 40 வயது முருகன் என்ற காமுகன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சேலம் மாவட்டம் இடைப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, வளையசெட்டிப்பட்டியை சேர்ந்த முருகன்- சின்னக்கண்ணு தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சங்ககிரி - இடைப்பாடி மெயின்ரோட்டில் உள்ள ஒரு தனியார் சர்வீஸ் ஸ்டேஷனில் முருகன் வேலை செய்து வருகிறார். அவருடன், வேலை செய்யும் மற்றொரு ஊழியரான காமராஜ். தமது ஆறு வயது மகளோடு கடந்த 23-ம் சர்வீஸ் ஸ்டேஷனிலேயே உறங்கியிருக்கிறார்.
அப்போது, சபலபுத்தி கொண்ட முருகன் 6 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்திருக்கிறார். இதில் சிறுமி அலறிப் போய் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து சங்ககிரி மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications