ராகுல், சோனியா தொகுதியின் விஐபி அந்தஸ்து, பவரை பறித்த அகிலேஷ் யாதவ் அரசு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேத்தி ஆகியவை உத்தர பிரதேசத்தில் உள்ளன. அந்த 2 மாவட்டங்களுக்கும் விஐபி அந்தஸ்து அளித்தது சமாஜ்வாடி கட்சி அரசு. பிற மாவட்டங்கள் மின்தடையால் அவதிப்பட இந்த 2 மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்கள் மின்தடையில்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன.
இதற்கிடையே காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி இடையேயான உறவு முன்பு போல சுமூகமாக இல்லை. இந்நிலையில் அகிலேஷ் யாதவ் அரசு ரேபரேலி மற்றும் அமேத்தியின் விஐபி அந்தஸ்தை பறித்ததோடு மின்தடையில்லா மாவட்டம் என்ற அந்தஸ்தையும் பறித்துவிட்டது. இத்தனை காலமாக மின்தடை என்றால் என்னெவென்று அறியாத இந்த 2 மாவட்ட மக்கள் தற்போது 4 மணிநேரத்திற்கும் அதிகமாக மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.
கோடை காலத்தில் மின்தேவை அதிகரிப்பதால் தான் இந்த 2 மாவட்டங்களிலும் மின்தடை செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் மெய்ன்பூரி(சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தொகுதி), கன்னௌஜ்(அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிளின் தொகுதி), இதாவா( முலாயமின் சொந்த மாவட்டம்), சாம்பல்(முலாயமின் உறவினர் தர்மேந்திர சிங் யாதவின் தொகுதி) மற்றும் ராம்பூர்(கேபினட் அமைச்சர் முகம்மது ஆலம் கானின் தொகுதி) ஆகியவைக்கு மட்டும் தங்கு தடையில்லாமல் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications