ஜெர்மனியில் மன்மோகன்சிங் விருந்தை மேற்பார்வையிட வந்த நரி!

Subscribe to Oneindia Tamil

பெர்லின்: ஜெர்மனியில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு விருந்து அளிக்க தயாராகிக்கொண்டிருந்த மண்டபத்தில் நரி ஒன்று நுழைந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

3 நாள் அரசுமுறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அந்த நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று விருந்து வழங்கி சிறப்பித்தார். இந்த விருந்தில் மன்மோகன்சிங் மனைவி குர்சரண் கவுர், வர்த்தக மந்திரி ஆனந்த் சர்மா, பிரதமரின் முதன்மைச்செயலாளர் புலோக் சாட்டர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன். பிரதமரின் அந்தரங்க செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

விருந்து தொடங்குவதற்கு முன்பாக அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தன. அப்போது அந்த மண்டபத்திற்குள் அழையா விருந்தாளியாக ஒரு நரி நுழைந்து விட்டது. அதைக் கண்டதும் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் திகைத்துப் போனார்கள். ஆனால் அந்த நரி சில நிமிடங்களில், யாருக்கும் பிரச்சினை வைக்காமல் தானாகவே அங்கிருந்து வெளியேறி சென்றது. அதன்பிறகுதான் பாதுகாப்பு அதிகாரிகள் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+