வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன்: மத்திய அமைச்சர் சரத்பவார் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் 3வது அணியைப் பற்றி பேசியிருந்தார். அப்போது சரத்பவார் தலைமையில்தான் 3-வது அணி அமையக் கூடும் என்று கூறப்பட்டது.
ஆனால் இதை முற்று முழுதாக சரத்பவார் நிராகரித்திருந்தார். முலாயம்சிங் சொல்வதைப் போல 3-வது அணி அமைவதற்கான சாத்தியம் இல்லை என்றும் சரத்பவார் நிராகரித்திருந்தார்.
இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று இன்று அவர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications