For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உசிலம்பட்டியில் ஃப்ளக்ஸ்போர்டு வைக்க 144 தடை உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் போஸ்டர்கள், ஃப்ளக்ஸ் போர்டுகள் வைக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உசிலம்பட்டியின் முக்கிய வீதி ஒன்றில் பல்வேறு தலைவர்களின் சிலைகள் உள்ளன.

இங்கு நடைபெறும் கோவில் விழாக்கள், தலைவர்களின் பிறந்தநாட்களுக்கு போஸ்டர்கள், பேனர்கள் வைப்பது வழக்கம். மேலும் அரசியல் கட்சியினரும் , பிளக்ஸ் பேனர்கள், பிரச்னையை தூண்டும் சுவரொட்டிகள், கட்சிகளின் போஸ்டர்கள் ஆகியவற்றை வைக்கின்றனர். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து உசிலை ஆர்.டி.ஒ. துரைப்பாண்டியன் உத்தரவின் பேரில், உசிலம்பட்டியை சுற்றியுள்ள வத்தலக்குண்டு சா‌லை, மதுரை சாலை, தேனி சாலை, பேரையூர் சாலை உள்ளிட்ட உசிலை எல்லை வரை பிளக்ஸ் போர்டுகள் வைக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
Police have clamped section 144 to put up flex banner in Usilampatti to avoid classes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X