ரஷிய அதிபர் புதினை பிளாக்லிஸ்ட்டில் போட்ட பின்லாந்து- மன்னிப்பு கோரியது!
Subscribe to Oneindia Tamil

பின்லாந்து நாட்டுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருக்கும் பிளாக்லிஸ்ட்டில் ரஷிய அதிபர் புதினின் பெயர்ம் இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் உருவானது. இதைத் தவிர்க்கும் வகையில் பின்லாந்து புதினின் பெயரை நீக்கியதுடன் ரஷிய அதிபரிடமும் அந்த நாடு மன்னிப்பு கோரியது.
பின்லாந்தின் அமைச்சர் பைவி ரசனேன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ரஷிய அதிபர் புதினின் பெயர் தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. இதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ரஷிய புதினின் பெயர் எப்படி பிளாக்லிஸ்ட்டில் இடம்பெற்றது என்பது தொடர்பாக பின்லாந்து அரசு விசாரணை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications