ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம்: 22 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பானில் இன்று காலையில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்திற்கு 22 பேர் காயமடைந்தனர். அதில் 7 பேர் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பானின் தென்மேற்கு பகுதியான கோபே அருகே இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வீடுகள் இடிந்து விழுந்து 22 பேர் காயமடைந்தனர். 7 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உயிரிழப்பு பற்றியோ வேறு சேதமதிப்பு பற்றியோ தகவல்கள் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. ஜப்பானில் தற்போது ஒரே ஒரு அணு உலை மட்டும் இயங்கி வருகிறது.
இந்த நிலநடுக்கத்தால் உலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடுமையான சுனாமி அலைகள் தாக்கின. இதனால் அங்கு இயங்கி வந்த அணு உலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+