இங்கிலாந்தில் இந்தியப் பெண் 2 மகள்களுடன் மர்மச் சாவு

லண்டனின் வடமேற்கே உள்ள ருசிலிப் என்ற இடத்தில் வசித்தவர் ஹீனா சோலங்கி (34). இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆய்வுக்கூட தொழில்நுட்ப ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் தனது மகள்கள் ஜாஸ்மின் (9), பரீஷ் (4) ஆகியோருடன் வீட்டிற்குள் பிணமாக கிடந்தார்.
தகவல் கிடைத்ததும் லண்டன் போலீசார் விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றினர். வீட்டில் கிடந்த ஒரு சூட்கேஸ் மற்றும் ஒரு குழாயையும் எடுத்து சென்றார்கள்.
2 மகள்களுடன் அவர் செத்தது எப்படி? என்பது மர்மமாக இருக்கிறது. அதே நேரத்தில் கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக இருக்கலாம் என்று ஒரு தகவலும், ஏதோ குடும்ப பிரச்சனையில் அவர் தனது 2 குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்திருக்கலாம் என்று மற்றொரு தகவலும் கூறுகின்றன.
விசாரணை நிறைவடைந்த பிறகே உண்மை தெரியும். தற்போதைக்கு எதுவும் கூற இயலாது என்று போலீசார் கூறி விட்டனர்.
இச்சம்பவம் நடைபெற்ற வீட்டில் ஹீனா சோலங்கி தனது கணவர் கால்பிஷ் (42) மற்றும் அவருடைய பெற்றோருடன் வசித்தார். சம்பவம் நடைபெற்ற போது இவர்கள் யாரும் வீட்டில் இல்லை. மனைவி, குழந்தைகள் இறந்த தகவல் கிடைத்த பிறகே கால்பிஷ் வீடு திரும்பியிருக்கிறார்.
ஹீனா சோலங்கி குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். திருமணத்திற்கு பிறகு லண்டனில் குடியேறினார்.












Click it and Unblock the Notifications