கிங்பிஷர் பங்கு விலை ரூ. 6.90.. ஒரு காலத்தில் ரூ. 335 ஆக இருந்தவை!

Subscribe to Oneindia Tamil

Vijay mallya
மும்பை: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை இன்று அடியோடு சரிந்து ஒரு பங்கு ரூ. 6.90க்கு விற்பனையாகி வருகிறது. இந்தப் பங்குகளின் விலை 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி ரூ. 335 ஆக இருந்தது நினைவுகூறத்தக்கது.

ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட 14 வங்களிடம் ரூ. 7,000 கோடியை வாங்கிய கிங்பிஷர் உரிமையாளர் விஜய் மல்லையா, அதற்கு இப்போது வட்டி கூட கட்டவில்லை. இந்தப் பணத்தை அவரிடம் இருந்து எப்படி மீட்பது என்று தெரியாமல் வங்கிகள் திணறி வருகின்றன.

ஏர்லைன்ஸ்சும் மூடப்பட்டுவிட்டது, விமானங்களை குத்தகைக்குத் தந்தவர்கள் எடுத்துச் செல்ல ஆரம்பிவிட்டனர், ஏர்லைன்ஸ்சின் லைசென்ஸ் ரத்தாகிவிட்டது, ஊழியர்களுக்கு பல மாதம் சம்பளம் கொடுக்கவில்லை, எரிபொருள் நிறுவனங்களுக்கு கடனை அடைக்கவில்லை.. இப்படி பல நெருக்கடிகளில் உள்ளது கிங்பிஷர் நிறுவனம்.

இந் நிலையில் வாங்கிய கடனுக்காக மல்லையா தந்த சில சொத்துக்களையும் சில நிறுவனங்களின் பங்குகளையும் விற்கும் வேலையை வங்கிகள் ஆரம்பித்துள்ளன. மேலும் இப்போதைக்கு இந்த விமான நிறுவனம் மீண்டும் இயங்க வாய்ப்பில்லை என்பதும் உறுதியாகிவிட்டது.

இதையடுத்து இன்று இதன் பங்குகள் விலை இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்தன. அதன் விலை இப்போது ரூ. 6.90 ஆக உள்ளது. இந்தப் பங்குகளின் விலை 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி மிக அதிகபட்சமாக ரூ. 335 ஆக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+