குமரி மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. நீக்கம்: ஜெ. அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: கன்னியாகுமரி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும் நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை மாவட்ட கழக பணிகளை தமிழ்மகன் உசேன் (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்) கூடுதலாக மேற்கொள்வார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications