மும்பை குண்டுவெடிப்பு: சஞ்சய் தத்தை தொடர்ந்து சைபுனிஷா, 6 பேர் சரணடைய அவகாசம் தந்த சுப்ரீம் கோர்ட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி; மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஷைபுனிஷா உட்பட 7 பேர் நீதிமன்றத்தில் சரணடைய 4 வார கால அவகாசம் அளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பை அண்மையில் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தது. அதில் பலரது சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றம் சிறைத் தண்டனையை உறுதி செய்ததைத் தொடர்ந்து தாம் நீதிமன்றத்தில் சரணடைய 6 மாத கால அவகாசம் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். ஆனால் அவருக்கு 4 வார கால அவகாசம் மட்டுமே கொடுத்தது உச்சநீதிமன்றம்.

தற்போது சஞ்சய்தத் உட்பட 8 பேர் நீதிமன்றத்தில் சரணடைய கால அவகாசம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications