5 வயது சிறுமி கற்பழிப்பு- பிரதமர் கண்டனம்

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங் விடுத்துள்ள அறிக்கையில், '5 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சிகரமானதும், அவமானகரமானதும் ஆகும். இதைப் போன்ற கொடுமைகளை நம்மிடையிலிருந்து களைய ஒன்றுபட்ட சமுதாயமாக நாம் உழைக்க வேண்டும்,' என்று கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, 'குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை நடத்தப்பட்ட பிறகு கடுமையான தண்டனை வழங்கப்படும்,' என்று கூறினார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை இன்று காலை நேரில் சென்று சந்தித்த மத்திய சுகாதாரத்துறை ஆசாத் குலாம் நபி ஆசாத், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜும் மருத்துமனைக்குச் சென்று சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். சிறுமிக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications