நெல்லை எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட சென்ற 17 பெண்கள் உள்பட 160 பேர் கைது
நெல்லை: நெல்லை எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற 17 பெண்கள் உள்பட 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜமாஅத்தினருக்கிடேயே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் எஸ்ஐ உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் சப் இன்ஸ்பெக்டர் கொடுத்த புகார் காரணமாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து இன்று மாலை நெல்லை எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகை இட சென்ற 160 பேர் ஆலங்குளம் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 17 பெண்கள், 143 ஆண்கள் அடங்குவர். மேலும் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.