பெங்களூர் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னையில் மேலும் 32 'அனாதை' கார்- பைக்குகள் பறிமுதல்
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் கேட்பாரற்று நின்ற மேலும் 32 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பின்னர் சென்னையில் தொடர்ச்சியாக வாகன சோதனை மற்றும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பொது இடங்களில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இச் சோதனையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக 29 கார் டிரைவர்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 83 பேர், 7 ஆட்டோ டிரைவர்கள் உள்பட 124 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.
இதேபோல பொது இடங்களில் கேட்பாரற்று நின்ற 13 கார், 15 மோட்டார் சைக்கிள்கள், 4 ஆட்டோக்கள் என மொத்தம் 32 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றை ஆவணங்கள் மூலம் விசாரணை செய்து அவர்களின் உரிமையாளர்களிடம் 15 வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன. மீதியுள்ள 17 வாகனங்கள் அந்தந்த பகுதி குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications