மரக்காணத்தில் அமைதி நிலவ அனைவரும் ஒத்துழைக்க கருணாநிதி வேண்டுகோள்

சென்னையில் செய்தியாளர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி விவரம்:
கேள்வி: மரக்காணத்தில் பெரிய கலவரம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எப்படி இருக்கிறது?
பதில்:அதைப்பற்றித் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், ரவிக்குமாரும் இந்நேரம் வரை என்னைச் சந்தித்துப் பேசினார்கள். தமிழ்நாட்டில் சாதி மோதல்கள் நடப்பதும், அதன் காரணமாக துப்பாக்கி முனையிலே பதில் சொல்வதும் தமிழ்நாட்டிற்கு நல்ல அறிகுறியல்ல. உடனடியாக காவல் துறை தகுந்த கவனம் செலுத்தி, அமைதியை உருவாக்க முன் வர வேண்டும். தலைவர்களும் தங்கள் கடமையை மறவாமல் அக்கறையோடு அலசி அவர்களும் அமைதிக்கு ஒத்துழைக்க வேண்டும்.
கேள்வி: மாமல்லபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் எல்லா கட்சிகளின் தலைவர்களையும் ஒருமையில் சாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கெல்லாம் திராவிடக் கட்சிகள் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். சாதிகளையெல்லாம் அடையாளப்படுத்திப் பேசியிருக்கிறாரே அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: ராமதாஸ் பேசியதைப் பற்றி பத்திரிகையாளர்களாகிய உங்கள் உணர்வு என்ன? அதிலே உங்களுக்கு ஏற்பட்டுள்ள உணர்வு தான் எனக்கும்.
கேள்வி:நிலக்கரி சுரங்க ஊழலில் மத்திய சட்ட அமைச்சர் சி.பி.ஐ. விசாரணையிலே தலையிட்டார் என்று சி.பி.ஐ. இயக்குனரே உச்ச நீதி மன்றத்திலே அறிக்கை தாக்கல் செய்தது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: நேர்மையாக எல்லாம் நடக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து.
கேள்வி: தமிழகச் சட்டசபையில் தொடர்ந்து எதிர்க் கட்சிகளையெல்லாம் வெளியேற்றி வருகிறார்கள். அதைப் பற்றி எதிர்க் கட்சிகள் எல்லாம் கேட்டுக் கொண்டும், அரசு அதற்கு செவி சாய்க்கவில்லையே?
பதில்: உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என்று பதிலளித்திருக்கிறார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications