பெல்காமில் கல்லூரி மாணவி கடத்தி கற்பழித்துக் கொலை: குற்றவாளிகளுக்கு வலை

கர்நாடக மாநிலம் பெல்காமில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தவர் 20 வயது மாணவி ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு கிளம்பிய அவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தார் அவரை பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதையடுத்து அவர்கள் நேற்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில் பெல்காமில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள சுலேபாவி கிராமத்தில் நிர்வாண கோலத்தில் ராணியின் உடல் கிடந்தது கண்டிபிடிக்கப்பட்டது. அவர் பலரால் கற்பழித்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. குற்றவாளிகள் அவரைக் கொன்று அவரது முகத்தை கல்லால் சிதைத்து உடலில் மராதா என்று தேவனகிரியில் எழுதி வைத்துள்ளனர்.
ராணியின் ஆடை மற்றும் காலணிகளை வைத்து இறந்தது அவர் தான் என்பதை அவரது தந்தை உறுதி செய்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவத்தைக் கண்டித்து சுலேபாவி கிராம பேருந்து நிலையம் அருகில் உள்ள ரோட்டில் கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று எஸ்.பி,.ற்றும் துணை கமிஷனர் உறுதியளித்த பிறகே அவர்கள் கலைந்து சென்றனர்.
பெல்காம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்டுள்ளது கடந்த 3 மாதத்தில் இது 2வது முறையாகும். கடந்த ஜனவரி மாதத்தில் அதானியில் ப்ரீ யூனிவர்சிட்டி மாணவி பலரால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் மாணவியின் உடலை எரித்துவிட்டனர். குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications