இன்று ஹோட்டல்கள் ஸ்டிரைக்… 'அம்மா உணவகத்தில்' கூட்டம் அலைமோதல்!!

ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவு தரமானதுதான என்பதற்காக உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. மேலும் குளிர்சாதன வசதிக் கொண்ட ஓட்டல்களுக்கு 12.36 சதவீதம் சேவை வரி அண்மையில் மத்திய அரசு விதித்தது. இதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், சேவை வரி மற்றும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் ஆகியவற்றை ரத்து செய்யக் கோரியும் நாடு முழுவதும் இன்று ஓட்டல்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 75 சதவீத உணவகங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
10 ஆயிரம் உணவகங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. சைவம், அசைவ உணவகங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் சிறு உணவகங்கள் இந்த ஸ்ட்ரைக்கில் பங்கேற்க வில்லை.
சென்னையில் முக்கிய உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் அம்மா உணவகங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பிற ஹோட்டல்களை விட இங்கு 1ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யப்படுவதால் சாதாரண நாட்களில் ஏராளமானவர்கள் வந்து இட்லி சாப்பிடுவார்கள். இன்று மிகப்பெரிய உணவகங்கள் மூடப்படும் என்று கூறப்பட்டதால் அதிக கூட்டத்தை எதிர்ப்பார்த்து கூடுதல் இட்லி தயாரிக்கப்பட்டதாக மகளிர் சுய உதவிக்குழுவினர் தெரிவித்தனர்.
வழக்கத்திற்கு மாறாக இன்று விரைவிலேயே இட்லிகள் விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications