சேற்றில் சிக்கிய பெண் யானை 'கும்கி' யானை உதவியுடன் மீட்பு
Tamilnadu
oi-Shameena
By Siva
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் சேற்றில் சிக்கிய பெண் யானை கும்கி யானையின் உதவியுடன் மீட்கப்பட்டது.
20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை யானை கூட்டத்தை விட்டு வெளியே வந்தது. அது கார்குடி வனச்சரகம், நெல்லிக்கரை பகுதி சதுப்பு நிலத்தில் உள்ள குளத்திற்கு தனியாக வந்தது. குளத்தில் தண்ணீர் குடித்த யானை சேற்றில் மாட்டிக் கொண்டது.
இது குறித்து கார்குடி வனச்சரக அலுவலர் காந்தனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து குளத்திற்கு வந்த வன ஊழியர்களின் உதவியுடன் கால்வாய் வெட்டி யானையை மீட்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் யானையை மீட்க முடியவில்லை. இதையடுத்து முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்த கும்கி யானையை வரவழைத்து சுமார் 3 மணிநேரம் போராடி அந்த பெண் யானை மீட்கப்பட்டது.