ம.பி.யில் பலாத்காரம் செய்யப்பட்ட 5 வயதுச் சிறுமி மரணம்
போபால்: மத்தியபிரதேசமாநிலத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி திங்கட் மருத்துவமனையில் மரணமடைந்தாள்.
மத்திய பிரதேச மாநிலம், சியோனி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமி கடந்த ஏப்.17ம் தேதி வீட்டின் வாசலருகே விளையாடிக் கொண்டிருந்தார். அந்தச் சிறுமிக்கு 'சாக்லேட்' கொடுப்பதாக ஆசைகாட்டி அழைத்துச் சென்ற இருவர் சிறுமியை பலாத்காரம் செய்தனர். மறுநாள் வயல் வெளியில் மயங்கிக் கிடந்த சிறுமியை பெற்றோர் உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிறுமியின் நிலை மோசமானதை அடுத்து, கடந்த 21ம் தேதி விமான ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, நாகபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
இதனிடையே சம்பவத்தில் தொடர்புடைய 2 குற்றவாளிகளைக் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கோமா நிலைக்குச் சென்ற சிறுமி திங்கள் கிழமை மாலை பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் மத்தியபிரதேச மாநில மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.