இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்தால் 40 தமிழக, புதுவை எம்.பி.க்களும் ராஜினாமா செய்யுங்கள்: பாஜக

Subscribe to Oneindia Tamil

Pon Radhakrishnan
சென்னை: இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறாமல் இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 40 எம்.பி.க்களும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு புறக்கணித்து வருவது வருத்தம் அளிக்கிறது. காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆனாலும், இலங்கையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கையில் மாநாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எனவே தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 மக்களவை உறுப்பினர்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து இலங்கை காமன்வெல்த் மாநாடு நடைபெறாமல் தடுக்குமாறு வலியுறுத்த வேண்டும்.

இதனை பிரதமர் ஏற்கவில்லை என்றால் 40 எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+