'இஷ்டப்படி எல்லாம் என்னை ஆட்டி வைத்தான் டமேர்லன்‘: பாஸ்டனில் குண்டு வைத்தவனின் தோழி பரபரப்பு பேட்டி

பாஸ்டன் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய குற்றவாளி டமேர்லன் ட்சர்னேவ் போலீசாரின் தேடுதல் வேட்டையில் சுட்டுக்கொல்லப்பட்டான். இவனது தம்பி ஷோக்கர் கைது செய்யப்பட்டார்.
டமேர்லனுடன் சுமார் 3 ஆண்டு காலம் நெருங்கிப் பழகிய அவனது தோழி நேடைன் அசென்காவோ, டமேர்லன் ட்சர்னேவ் உடனான தனது அனுபவம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
புகையை வெறுத்த பகையாளி...
அதில், ‘நான் அவனை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவனுடைய சந்தோஷத்திற்காக என்னால் முடிந்ததை எல்லாம் செய்திருக்கிறேன். ஆரம்பத்தில், கஞ்சா புகைப்பது, அதிகமாக பார்ட்டிகளில் பங்கேற்பது என்று இருந்த அவன், காலப்போக்கில் இவற்றை எல்லாம் வெறுக்கத் தொடங்கினான்.
முரணானது...
என்னுடன் அடிக்கடி உடலுறவு வைத்துக்கொண்ட அவன், ஒரு கட்டத்தில், திருமணம் செய்துக் கொள்ளாமல் உடலுறவில் ஈடுபடுவது மதக் கொள்கைகளுக்கு முரண்பாடானது என்று கூறி உடலுறவை தவிர்த்துவிட்டான்.
அதன் பிறகு தீவிரவாதியாக, வன்முறை செயல்களில் அவன் அதிக நாட்டம் காட்ட தொடங்கினான். நாகரீக உடைகளை நான் அணிவதை அவன் கடுமையாக எதிர்த்தான்.
அவனுடைய கொள்கை வெறியில் என்னையும் சாய்க்க அவன் எனக்கு மூளைச் சலவை செய்ய முயன்றான். நல்ல வேளையாக அவனிடமிருந்து நான் விலகி விட்டேன்' என இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications