Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீக்கியர் கலவர வழக்கு-சஜ்ஜன்குமார் விடுவிப்புக்கு எதிர்ப்பு - முடங்கியது டெல்லி மெட்ரோ ரயில் சேவை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்குகளில் ஒன்றில் இருந்து காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சீக்கிய அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் டெல்லி மெட்ரோ ரயில் சேவைகள் முடங்கின.

டெல்லி மற்றும் ஜம்மு பகுதிகளில் சீக்கியர்கள் இன்று கண்டனப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் ஜம்மு- பதான்கோட் பிரதான சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிப்புக்கு உள்ளானது.

இந்த விவகாரத்தில் கோபமுற்ற சீக்கியர்கள் பலர் டெல்லியில் சில இடங்களில் போக்குவரத்தை தடை செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 1984 கலவர கயவர்களைத் தூக்கிலிடு என்ற வாசகம் அடங்கிய பதாகைகளைத் தாங்கியபடி, எங்களுக்கு நீதி வேண்டும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். டெல்லியில் திலக் நகர் காவல் நிலையத்தில் இருந்து மேற்கு டெல்லி பகுதிக்கு ஊர்வலமாகச் சென்ற அவர்கள், அங்கு போக்குவரத்தை தடை செய்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் சென்று, ரயில் நிலையங்களை மூடுமாறு முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சுபாஷ் நகர் மெட்ரோ நிலைய ரயில் சேவை முடங்கியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+