மே தின கொண்டாட்டம்: கொடியேற்றி, 600 பேருக்கு சீருடை வழங்கிய விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக சார்பில் மே தின விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உலகம் முழுவதும் இன்று மே தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தேமுதிக சார்பில் மே தின விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த கொண்டாட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். விழாவில் இளைஞர் அணி செயலாளர் எல்.கே. சுதீஷ், கழக மகளிர் அணி செயலாளர்டாக்டர் சிவகாமி முத்துக்குமார், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் செயலாளர் எம். சௌந்திரபாண்டியன், பேரவை துணை தலைவர் இரா.சு. சேகர், துணை செயலாளர் பி. வேணுராம், கூட்டுறவு சங்க பிரிவு செயலாளர் சுதேஸ், மத்திய சென்னை மாவட்ட கழக செயலாளர் க. செந்தமாரைக் கண்ணன், தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் வி.என். ராஜன், வடசென்னை மாவட்ட கழக செயலாளர் வி. யுவராஜ்,
மேற்கு சென்னை மாவட்ட கழக செயலாளர் ஏ.எம். காமராஜ் மற்றும் தொழிற்சங்க பேரவையின் இணைப்பு சங்க நிர்வாகிகள், கழக தொண்டர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கொடியேற்றிய விஜயகாந்த்

கொடியேற்றிய விஜயகாந்த்

தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் தொழிற்சங்க கொடியை கழக தலைவரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் ஏற்றி வைத்தார்.

தொழிலாளர்களுக்கு இனிப்பு

தொழிலாளர்களுக்கு இனிப்பு

கொடியை ஏற்றி வைத்த விஜயகாந்த் தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

சீருடையும் கொடுத்த கேப்டன்

சீருடையும் கொடுத்த கேப்டன்

600 தொழிலாளர்களுக்கு உழைப்பாளர் தினமான இன்று சீருடைகள் வழங்கினார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+