சரப்ஜித் சிங் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தானில் கைதிகள் தாக்குதலில் கோமா நிலைக்குச் சென்று மரணமடைந்த சரப்ஜித் சிங் குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் சிறையில் தாக்கப்பட்டு 6 நாட்களாக உயிருக்கு போராடிய சரப்ஜித்சிங்கினை நேற்று முன்தினம் அவரது மனைவி சுக்பிரீத் கவுர், சகோதரி தல்பீர்சிங், மகள்கள் பூனம், ஸ்வப்னதீப் கவுர் ஆகியோர் பார்த்து விட்டு நேற்று டெல்லி திரும்பினார்கள். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12.45 மணிக்கு மரணம் அடைந்தார். இதனால் சரப்ஜித் சிங்கின் உறவினர்கள் துயரமடைந்துள்ளனர்.

சரப்ஜித் சிங் மரணம் செய்தி அறிந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் சரப்ஜித் சிங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கு அவர் 40 நிமிடங்கள் இருந்தார்.

இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தி உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்டதாக உடனிருந்தவர்கள் கூறினார்கள். சரப்ஜித் சிங் உடலை உடனடியாக கொண்டு வர ஏற்பாடு செய்வதாக அப்போது ராகுல் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து பிஎஸ்எப் விமானத்தின் மூலம் சரப்ஜித் சிங் குடும்பத்தினர் தங்களின் சொந்த ஊரான அமிர்தசரஸ்க்கு புறப்பட்டு சென்றனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+