அதிமுக அமைச்சர் தொகுதி மாணவர்களுக்கு நிதியுதவி செய்த தேமுதிக எம்.எல்.ஏ.
விருதுநகர்: அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொகுதியைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கு தேமுதிக எம்.எல்.ஏ. மாஃபா பாண்டியராஜன் உதவி செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கலைமகள் பள்ளியில் பயில்கின்ற ரஞ்சித்குமார், ராஜ்குமார் ஆகிய இருவரும் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பாட்டத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால், மலேசியாவில் நடைபெறும் இரண்டாவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் மலேசியா செல்வதற்கு வசதியில்லாமல் அவர்கள் தவித்தனர்.

வர்களின் பெற்றோரிடம் "விருதுநகர் தேமுதிக எம்எல்ஏ மாஃபா பாண்டியராஜனைப் போய் பாருங்கள், உதவினாலும் உதவுவார் என்று பிரமுகர் ஒருவர் சொல்ல தயங்கியிருக்கின்றனர். காரணம் அவர்கள் வசிக்கும் திருத்தங்கல் விருதுநகர் தொகுதிக்குள் வராது. அதிமுக அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் சிவகாசி தொகுதிக்குள் வருகிறது. வேறொரு தொகுதியில் வசிப்பவர்களுக்கு இன்னொரு தொகுதி எம்.எல்.ஏ. உதவுவாரா? என்று மனதுக்குள் சந்தேகம்.
ஆனாலும் அந்த 2 மாணவர்களும் மாஃபா பாண்டியராஜனைப் போய் பார்த்து தங்களது ஆர்வத்தையும், குடும்பச் சூழ்நிலையையும் விளக்கியிருக்கின்றனர். உடனே அவர் "தமிழகத்தில் உள்ள இளம் வீரர்களின் திறமை ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெளிப்பட வேண்டும். அதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. நான் உதவுகிறேன் என்று ஊக்கப்படுத்தி ரூ.10,000 நிதி உதவி செய்திருக்கிறார். சிறப்பாக விளையாடி வெற்றி பெற இரண்டு மாணவர்களையும் வாழ்த்தி அனுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications