மரக்காணம் கலவரம்- ஒருவர் கொலையானதாக வழக்குப் பதிவு!

Subscribe to Oneindia Tamil

மரக்காணம்: மரக்காணம் கலவரத்தில் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட இருவரில் ஒருவரின் மரணம் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி, மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்கத்தின் சித்திரை பெருவிழாவிற்கு வாகனத்தில் சென்ற அரியலூர் செல்வராஜ், தஞ்சாவூர் விவேக் ஆகிய இருவரும், மரக்காணத்தில் நடைபெற்ற சாலை மறியலின்போது வாகனத்தை விட்டு கீழே இறங்கி நின்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தின்போது இருவரும் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளனர்.

Marakkanam Violence: Police register murder case

இருவரும் விபத்தில் இறந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது கட்சியினரும் கூறி வந்தனர். இந்நிலையில், அவர்களில் செல்வராஜ் கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேதபரிசோதனை மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

இதையடுத்து காவல்துறையினர், வழக்கை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க கிளியனூர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்வாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+