முடிஞ்சா அடுத்த சம்மருக்கு விண்வெளி டூர் போயிட்டு வாங்களேன்...
வாஷிங்டன்: பயணிகளை விண்வெளிக்கு ஏற்றிசெல்லும் முயற்சியில், தனியார் விண்கலம் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளி டூருக்கு மக்களை அழைத்துச் செல்லலாம் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பொதுவாக பயணங்கள் சுகமானவை. அதிலும் விண்வெளிப் ப்யணம் என்றால் கேட்கவா வேண்டும். விண்வெளியை சுற்றிப் பார்க்க விரும்பும் பயணிகளின் ஆசையை நிறைவேற்ற இதோ ஓர் முன்னோட்டம் வெற்றி.
மக்களுக்கு விண்வெளியில் டூர் அழைத்துச் செல்ல தனியார் விண்கலம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இது 2005ம் ஆண்டு துவங்கப்பட்ட திட்டமாகும்.

விண்வெளிய சுத்திப் பார்க்க போலாம்...
லண்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபரான பிராஸ்னனின் விர்ஜின் காலாக்டிக் நிறுவனம் விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதற்காக எஸ்.எஸ்.2 என்ற விண்கலத்தை தயாரித்துள்ளது.

சோதனை ஓட்டம்...
அதன் சோதனை ஓட்டம் அமெரிக்காவின் நியூமெக்சிகோவில் உள்ள விண்வெளி தளத்தில் நடந்தது.

விண்ணுக்கும், மண்ணுக்கும்...
அப்போது எஸ்.எஸ்.2 விண்வெளி ஓடம் டபிள்யூ கே.2 என்ற ராக்கெட்டின் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

மின்னல் மாதிரி....
அது 47 ஆயிரம் அடி உயரத்துக்கு சென்றதும் விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து ஒலி வேகத்தை விட அதிகமாக பாய்ந்து செல்லக்கூடிய "சூப்பர் சானிக்" வேகத்தில் பாய்ந்து சென்றது. இதன் மூலம் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஜாலி...
இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளிக்கு சுற்றுலா பயணம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications