செளதி அரேபியாவில் கனமழை: திடீர் வெள்ளத்தில் 13 பேர் பலி, பலரை காணவில்லை
Subscribe to Oneindia Tamil
ரியாத்: தெற்கு அரேபியாவில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலரை தேடும் பணி நடைபெறுகிறது.
தெற்கு அரேபியாவில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழை பெய்துள்ளது. அதன் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

தெற்கு அரேபியாவின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மிக மோசமான வெள்ளத்தில் சிக்கிய பலர், மரக் கிளைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதையும், கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதையும் அந்நாட்டு தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications