யு.எஸ்: பலர் இறப்புக்கு காரணமாக இருந்த செயற்கை மருந்துகளை விற்ற இந்தியருக்கு 3 ஆண்டு சிறை
வாஷிங்டன்: தடை செய்யப்பட்ட செயற்கை மருந்துகளை விற்ற இந்தியருக்கு மூன்றாண்டு சிறை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த பல்பீர்சிங் என்ற 28 வயது வாலிபன், அமெரிக்க நாட்டில் குளியல் உப்பு உள்ளிட்ட செயற்கை மருந்துகளை விற்றதாக அமெரிக்கக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு, நீதிமன்றம் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. தண்டனைக் காலம் முடிந்தவுடன், அவர் மீண்டும் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பபடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் சம்பந்தமாக பல்வீர் மன்னிப்புக் கோரினார். ஆனால், அரசாங்கம் தடை செய்த மருந்துகளை அவர் விற்றுள்ளார். இந்த மருந்துகள், பலர் இறப்பதற்கு காரணமாக இருந்துள்ளது என்று கூறி நீதித்துறை பல்பீர்சிங்கின் மன்னிப்பை நிராகரித்துள்ளது.
ஆனால், இந்தியானாபோலிஸ் நகரில் உள்ள குருத்வாராவில் , பல்பீர்சிங் குறித்து கடின உழைப்பாளி என்றும், பிறருக்கு உதவும் தன்மை கொண்டவர் என்று மக்கள் கருத்து தெரிவித்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications