சரப்ஜித்சிங் உடலை 'வெற்றிகரமாக' கொண்டு வந்துட்டோம்: பெருமிதப்படும் திக்விஜய்சிங்!

எல்லையில் சீனாவின் ஊடுருவல், பாகிஸ்தானில் சரப்ஜித்சிங் படுகொலை என இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் கழுத்து நெறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சரப்ஜித் சிங் கொலைக்கு எதற்காக நடந்தது? கொலை செய்தவர்கள் யார்? என்ற எந்த ஒரு உண்மையும் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.
அதே நேரத்தில் சரப்ஜித்சிங் உடலை இந்தியாவுக்கு கொண்டு வந்ததே 'மிகப் பெரிய வெற்றி'யாக கருதுகிறது காங்கிரஸ். அக் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய்சிங் தமது ட்விட்டர் பக்கத்தில் இப்படித்தான் கொண்டாடி இருக்கிறார் சரப்ஜித் சிங் உடலை முன்வைத்து... " சரப்ஜித் சிங் உடலை வெற்றிகரமாக கொண்டு வந்துவிட்டோம்" என்று... இதற்கு என்ன பதில் சொல்வது?
ஒருநாட்டின் ராணுவ வீரர்களின் தலையை வெட்டி எடுத்துப் போன ஒரு எதிரி நாட்டு பிரதமருடன் வெட்கமே இல்லாமல் மதிய விருந்து சாப்பிடும் இந்த தேசபக்தி திலகங்கள் ஒரு சடலத்தைக் கொண்டு வந்ததே பெரிய வீரமாக பேசிக் கொண்டிருக்கும் மனோபாவத்தை என்னவென்று சொல்வது? இவர்கள் கூடி விவாதித்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தேசத்தின் வெளியுறவுக் கொள்கையை என்னவென்று சொல்வது?
இதனிடையே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்து கோலோச்சிக் கொண்டிருக்கின்றன வீனா மாலிக் உள்ளிட்ட அனைத்து பாகிஸ்தானிய நட்சத்திரங்களையும் விளையாட்டு வீரர்களையும் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர் கண்ணீர்மல்க இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
அதுசரி 'உடலை' கொண்டு வந்ததே வெளியுறவுக் கொள்கையின் வீரமாக கருதுகிறவர்களுக்கு இந்த கண்ணீர் குரல் காதில் விழத்தான் போகிறதா?
-
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications