ஜம்மு சிறையில் பாக். கைதி மீது கடும் தாக்குதல்-ஆபத்தான நிலையில் அனுமதி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோட் பால்வல் சிறையில் பாகிஸ்தான் சிறைக் கைதி சனாவுல்லா என்பவர் இந்திய கைதி ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் கோட் லக்பத் சிறையில் இந்தியரான சரப்ஜித்சிங் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் கோட் பால்வல் சிறையில் சனாவுல்லா என்ற பாகிஸ்தான் கைதி மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் படுகாயமடைந்த ஷானுல்லா ஆபத்தான நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1999ஆம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் உட்பட ஐந்து வழக்குகளில் சனாவுல்லா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மீனவர்களைத் தவிர்த்து மொத்தம் 220 பாகிஸ்தானியர் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications