சத்துணவு.. பருப்பு பயன்படுத்தும் நாட்களில் காய்கறிக்கு 70 காசு, பயன்படுத்தாத நாட்களில் 82 காசு
நெல்லை: சத்துணவு திட்டத்திற்கு காய்கறி, எரிபொருள் வாங்க அரசு நிதியை அதிகரித்துள்ளது.
எம்ஜிஆர் சத்துணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு சத்துணவு தயாரிக்க தேவைப்படும் காய்கறி, மசாலா பொருட்கள் மற்றும் எரிபொருள்கள் வாங்க வழங்கப்பட்ட உணவூட்ட செலவினம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காய்கறிக்கு 32 காசு, தாளிதத்துக்கு 14 காசு, எரிபொருளுக்கு 24 காசு என 70 காசு அதிகரித்துள்ளது.
பருப்பு பயன்படுத்தும் நாட்களில் காய்கறி 70 காசு, தாளிதம் 20 காசு, எரிபொருள் 40 காசு என 1 ரூபாய் 30 காசும்,
பருப்பு பயன்படுத்தாத நாட்களில் காய்கறி 82 காசு, தாளிதம் 40 காசு, எரிபொருள் 48 காசு என ஒரு ரூபாய் 70 காசும் வழங்க உத்தரவாகியுள்ளது.
நடுநிலைப்பள்ளி மாணவர்கள்
நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 80 காசுலிருந்து பருப்பு பயன்படுத்தும் நாட்களில் 1 ரூபாய் 40 காசும், பருப்பு பயன்படுத்தாத நாட்களில் 1 ரூபாய் 80 காசுமாக உணவூட்டும் மொத்த செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடிப் பிள்ளைகள்
இதே போல் 5 வயது குழந்தைகளுக்கான உணவூட்டும் செலவு 56 காசிலிருந்து 1 ரூபாய் 13 காசு முதல் 1 ரூபாய் 35 காசு வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சத்துணவு திட்டத்துக்கு தற்போது வழங்கி வரும் 5 கோடியோ 76 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயுடன் கூடுதலாக 5 கோடியோ 73 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.
அதே போல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் திட்டத்துக்கு தற்போது ஆகும் செலவான ரூ.1 கோடியோ 62 லட்சத்து 71 ஆயிரத்துடன் அதிகப்படியாக 1 கோடியோ 99 லட்சத்து 25 ஆயிரம் செலவாகும். இச்செலவுக்கு நிதி ஓப்பளிப்பு வழங்கி அரசு அணையிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications