பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஊழியர் சஸ்பெண்ட்
மதுரை: பாலியல் புகாரின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கல்வி ஒளிபரப்பு ஆய்வு மைய நிகழ்ச்சி தயாரிப்பாளர் ரவிகுமார். அவர் உடன் பணி புரியும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக துணை வேந்தர் கல்யாணிக்கு புகார் வந்தது. இது தவிர அவர் ஆய்வு மைய நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் ரவிகுமாரை சஸ்பெண்ட் செய்வது என்று சின்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரவிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும் நிதி முறைகேடு குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் ரவிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications