பெங்களூர் குண்டுவெடிப்பு- கோவையில் இருவர் கைது
கோயம்புத்தூர்: பெங்களூர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூர் மல்லேசுவரத்தில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே ஏப்ரல் 17-ந் தேதி குண்டுவெடித்தது. இதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெங்களூர் தனிப்படை போலீசார் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த கிச்சான் புகாரி, பஷீர், பீர் முகைதீன் மற்றும் சதான் உசேன் ஆகியோரை தமிழ்நாட்டில் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று காலையில் கோவையில் ஹக்கீம், அஸ்கர் அலி ஆகிய இருவரையும் பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் போலீசார் கைது செய்தனர். பெங்களூர் குண்டு வெடிப்புக்கு தேவையான வெடி பொருட்களை இருவரும் வாங்கிக் கொடுத்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இருவரும் விரைவில் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications