தமிழக மாணவர்கள் 97 பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்திலிருந்து 97 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
2012ம் ஆண்டுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 3) வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் 998 பேர் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றனர்.
கேரளாவைச் சேர்ந்த ஹரிதா வி. குமார் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 97 பேர் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அதிலும் தமிழ் வழியில் எழுதிய 2 பேர் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழக அளவில் ஏ.அருண் தம்புராஜ் 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் தற்போது ஐ.பி.எஸ். அதிகாரியாக கர்நாடகத்தில் பணியாற்றி வருகிறார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் டி. பிரபு ஷங்கர் (29) அகில இந்திய அளவில் 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
நெசவாளர் குடும்பம்
ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழ் வழியில் எழுதி 91-ஆவது ரேங்க் பெற்றுள்ளார் காஞ்சிபுரம் மாவட்டம், அனகாபுத்தூரைச் சேர்ந்த கங்காதரன் (30). இவர் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத முடியுமா என்ற சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. நிச்சயம் தமிழில் எழுதினால் ஐ.ஏ.எஸ்.-ஆக முடியும் என்கிறார் கங்காதரன்.
நாடுமுழுவதும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 29 பேர் இந்த ஆண்டு கூடுதலாக சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications