மின்வெட்டை கண்டித்து 12ம் தேதி திருப்பூரில் விஜயகாந்த் தலைமையில் கண்டன பேரணி
Subscribe to Oneindia Tamil

இது குறித்து தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வரும் கடுமையான மின்வெட்டினையும், அதனால் நசிந்து வரும் பின்னலாடை உற்பத்தி மற்றும் தொழில் துறை பாதிப்பையும் கண்டித்து மே 12ம் தேதி திருப்பூரில் கண்டனப் பேரணி நடைபெறும்.
திருப்பூரில் உள்ள ஸ்ரீசக்தி தியேட்டர் சந்திப்பில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் பேரணி புறப்படும். அதன் பின் மாலை 5 மணியளவில் ஊத்துக்குளி பிரதான சாலையில் உள்ள தனலட்சுமி மில் மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், மகளிரணி தலைவி பிரேமலதா ஆகியோர் பேசுகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications