For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை சென்னையில் திருமாவளவன் கட்சியின் சார்பில் மக்கள் ஒற்றுமை மாநாடு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை மாலை 5 மணிக்கு மக்கள் ஒற்றுமை மாநாடு நடைபெற உள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக அமைதிக்கான மக்கள் ஒற்றுமை மாநாடு நாளை மாலை 5 மணிக்கு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகின்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகின்றனர்.

இந்த தகவலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு உறுதிபடுத்தியுள்ளார்.

English summary
VCK has arranged for a conference in Chennai tomorrow. VCK chief Thirumavalavan will preside over the function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X