கர்ப்பிணியை ஈவ் டீசிங் செய்த கல்லூரி மாணவர்கள் கைது
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கர்ப்பிணிப் பெண்ணை ஈவ்டீசிங் செய்து தள்ளிவிட்ட மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவியாம்பாளையம், குட்டைப்பகுதியில் வேலை செய்துவிட்டு, பெண்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆனந்த், மனோகரன், பாலமுருகன், அருண்குமார் ஆகிய நான்கு பேரும் அந்த பெண்களை கிண்டலடித்தும் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர்.
அதில் முத்துலட்சுமியை நால்வரும் பின்புறமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முத்துலட்சுமி சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முத்துலட்சுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இது குறித்து விசாரணை செய்த சேந்தமங்கலம் காவல் துறையினர் 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி நால்வரையும் 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து 4 பேரும் பரமத்திவேலூர் சிறார் பாதுகாப்பு மையத்தில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications