2 அமைச்சர்களைப் போல் பிரதமரும் பதவி விலக வேண்டும்: அத்வானி வலியுறுத்தல்

பிரதமர் மன்மோகன்சிங், பவன்குமார் பன்சால், அஸ்வனி குமார் ராஜினாமா செய்தாக வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வைத்தனர். இதனால் 2 நாட்கள் முன்னதாகவே நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பவன்குமார் பன்சாலும் அஸ்வனிகுமாரும் பதவி விலகியுள்ளனர்.
இது பற்றி கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, இது மிகவும் காலதாமதமான நடவடிக்கை. இந்தக் கோரிக்கையைத்தான் நாங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைத்தோம். ஆனால் அப்போது இதை பிரதமர் ஏற்கவில்லை. இதனால் நாடாளுமன்றத்தின் மதிப்புமிக்க நேரம் வீணடிக்கப்பட்டுவிட்டது. இத்தோடு பிரச்சனை முடிந்துவிடவில்லை.
சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார், பிரதமரைக் காப்பாற்றுவதற்காகத்தான் சிபிஐ விசாரணை அறிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் பிரதமர் மன்மோகன்சிங்கும் கட்டாயம் ராஜினாமா செய்தாக வேண்டும். பிரதமர் மன்மோகன்சிங் பதவியில் நீடிப்பதற்கு நியாயம் ஏதும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications