இலங்கை: வடக்கு மாகாண சபை தேர்தலில் விடுதலைப் புலி தமிழினி போட்டி?
Subscribe to Oneindia Tamil

இலங்கை ராணுவத்தின் 'புனர்வாழ்வு' என்ற பெயரில் தற்போதும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் தமிழினி. அனேகமாக ஓரிரு மாதங்களில் அவர் விடுதலையாகலாம் எனத் தெரிகிறது.
இதனால் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் தேர்தலில் தமிழினியை நிறுத்த சில கட்சிகள் முயல்வதாக தெரிகிறது. அவரும் தேர்தலில் களம் இறங்க முடிவு செய்திருக்கிறார். அவர் விடுதலையான பிறகு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் தமிழினிக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்படக் கூடும் என யாழ்ப்பாணம் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேபோல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் பலரும் தேர்தலில் போட்டியிட இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications