கிருஷ்ணகிரி அணையில் மூழ்கி பெங்களூர் காதல் ஜோடி மரணம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு சுற்றுலா வந்த இடத்தில் பெங்களூரைச் சேர்ந்த காதல் ஜோடி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் உமேஷ் பேகம் மற்றும் இவரது தங்கை ரஷ்யா பேகம். இவர்கள் இருவரும் ஏற்கனவே திருமணமாகி கணவரிடமிருந்து விவாகரத்து ஆனவர்கள்.
அதன்பிறகு உமேஷ் பேகம் அதே பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவரையும், ரஷ்யா பேகம், ரோஷன் என்பவரையும் காதலித்து வந்தனர்.இவர்கள் நான்கு பேரும் நேற்று கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி. அணைக்கு சுற்றுலா வந்தனர்.
அணையை சுற்றிப் பார்த்துவிட்டு அவர்கள் ஒரு இடத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ரஷ்யா பேகம் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். கரைக்கு வரமுடியாமல் தத்தளித்த அவரை காப்பாற்ற சலீம் முயற்சி செய்துள்ளார். இருப்பினும் இருவரும் கரையேற முடியாமல் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சகோதரியும், அவரைக் காப்பாற்றச் சென்ற காதலரும் உயிரிழந்த சம்பவம் உமேஷ் பேகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கண்முன்னால் காதலி மூழ்கியது கண்டு ரோசனும் அதிர்ச்சியடைந்தார்.
அதன் பிறகு உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்கள் மூலம் இவர்கள் சடலம் மீட்கப்பட்டது. விரைவில் திருமணமாக இருந்த நிலையில் காதல் ஜோடிகளுக்கு சுற்றுலா வந்த இடத்தில் நடந்த விபரீதத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications