தேர்தல் முன்விரோதம் வாலிபர் வெட்டிக்கொலை- பதற்றம்
நெல்லை: நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் உளளாட்சி தேர்தல் முன்விரோதம் மற்றும் கொலை வழக்கில் சாட்சி சொன்னதற்காக தொழிலாளியை ஒரு கும்பல் வெட்டி கொன்றது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் நயினார் காலனியை சேர்ந்தவர் நடராஜன் மகன் வெள்ளைபாண்டி. இவருக்கு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவருக்கும் அதே காலனியை சேர்ந்த பிரபாகரனுக்கும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் ஒருகொலை வழக்கில் சாட்சி கூறியது தொடர்பாக மு்ன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் வீரவநல்லூர் அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் நேற்றிரவு 7 மணிக்கு வெள்ளைபாண்டியன் மற்றும் அவரது உறவினர்கள் மது அருந்தினர். அப்போது அங்கு பைக்குகளில் வந்த 12 பேர் கொண்ட கும்பல் வெள்ளைபாண்டியை சராமரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.
சம்பவ இடத்துக்கு நெல்லை எஸ்பி விஜேயந்திர பிதாரி, ஏடிஎஸ்பி மகேந்திரன், டிஎஸ்பிகள் பாலசுப்பிரமணியன், மணிவண்ணன், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், முத்து சுப்பிரமணியன் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.
வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரன் உள்ளிட்ட 12 பேரை தேடி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் உளளாட்சி தேர்தலில் விரவநல்லூர் நயினார் காலனியை சேர்ந்த பிரபகாரனும், இவரது உறவினர் வெங்கடாசலத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் வெங்கடாசலத்தின் அண்ணன் முருகப்பெருமாளை பிரபாகரன் உள்ளிட்ட சிலர் கடந்த 2006ம் ஆண்டு வெட்டி கொன்றனர்.
இவ்வழக்கில் ஜாமீனில் வநத பிரபாகரனை வெங்கடாசலம் பழிக்குபழியாக வெட்டி கொலை செய்ய திட்டமிட்டார். இதையறிந்த பிரபாகரன் உள்ளிட்ட சிலர் வெங்காடசலத்தை கடந்த ஆண்டு வெட்டி கொன்றனர். இந்த கொலை வழக்கில் பிரபாகரனுக்கு எதிராக கோர்டடில் வெள்ளைபாண்டி சாட்சி சொனனார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் உள்ளிட்ட சிலர் வெள்ளைபாண்டியனை வெட்டி கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications