காரைக்காலில் அரசு அதிகாரிகளுக்கு குழந்தைகள் பாலியல் வன்கொடுமையை தடுக்க சிறப்பு பயிற்சி
காரைக்கால்: காரைக்காலில் அரசு அதிகாரிகளுக்கு குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில் அரசு அதிகாரிகளுக்கு குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த சிறப்பு பயிற்சி முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.எஸ்.பி ஆன்டோ அல்போன்ஸ் முன்னிலை வகித்தார்.
இந்த பயிற்சி முகாமை கலெக்டர் அசோக்குமார் தொடங்கி வைத்து பேசியதாவது,
குழந்தைகள் பாலியல் வன்கொடுமையை தடுக்கும் வகையில் பல்வேறு தகவல்களையும், நுணுக்கங்களையும் அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.இன்றைய நிலையில் இது போன்ற சிறப்பு பயிற்சி முகாம் மிகவும் அவசியமானது.
குழந்தைகளை ஆண், பெண் என பிரித்துப் பார்க்காமல் இருபாலருக்கும் பாதுகாப்பு அளிப்பது அவசியம். குறிப்பாக, இன்றைய காலக் கட்டத்தில் ஆண் குழந்தைகள் தவறான பாதையில் செல்லும் நிலை உள்ளது. அதை நாம் தடுப்பது மிக அவசியம்.
இப்பயிற்சியின் மூலம் தெரிந்து கொள்ளும் தகவல்களை பிற அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக, பொது மக்களும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான தகவல்களை அவசியம் தாமே முன் வந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இந்த முகாமில் மாவட்ட எஸ்.பி வெங்கடசாமி, திட்டத்துறை துணை இயக்குனர் சாந்தா வில்லியம்ஸ், குழந்தைகள் நல குழுமத்தின் பொறுப்பளர் மணிவண்ணன், சமூக நலத்துறை உதவி இயக்குனர் சத்யா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல தமிழகத்திலும் அரசு அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகின்றது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications