கரூர் அருகே குடிபோதையில் ஏட்டைய்யாவை அடித்து நொறுக்கியவர் கைது
கரூர்: கரூர் அருகே உள்ள குளித்தலையில் போலீஸ் ஏட்டை அடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு குளித்தலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வீரமணிகவுண்டன்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (23) என்பவர் கோவில் அருகில் குடிபோதையில் நின்று கொண்டு வருவோர் போவோரிடம் தகராறு செய்து கொண்டு இருந்தார். இதை பார்த்த போலீஸ் ஏட்டு சுந்தர்ராஜன் செந்தில்குமாரை அந்த இடத்தை விட்டு போகுமாறு அறிவுறுத்தினார். இதில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு சுந்தரராஜனை செந்தில் குமார் அடித்து உதைத்தார். அடி தாங்க முடியாமல் ஏட்டு சத்தம் போட்டார்.
உடனே அருகில் இருந்த போலீசாரும், பொது மக்களும் ஓடி வந்து செந்தில்குமாரிடம் இருந்து ஏட்டை மீட்டனர்.
இதனையடுத்து சுந்தரராஜன் குளித்தலை காவல் நிலையத்தில் செந்தில்குமார் மீது புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் செந்தில்குமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications