மாவோயிஸ்டாக ஆயுதம் தூக்கிய அம்பேத்கர் உறவினர்

தண்டகாருண்ய காடுகள்... மகாராஷ்டிரா, ஒடிஷா, ஆந்திரா, சத்தீஸ்கர் என விரிந்துகிடக்கும் 45 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் காடுதான் மாவோயிஸ்டுகளின் கோட்டை... இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் செயலாளராக இருப்பவர் மிலிந்த் டெல்டும்ப்டே. மகாராஷ்டிரா மாநிலத்தின் யவட்மால் மாவட்டம் ரஜூர் கிராமத்தில் பிறந்தவர். இவரது வயது 47... இவரது சகோதரர் ஆனந்த், அரசியல் சாசன சிற்பியும் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சருமான அண்ணல் அம்பேத்கரின் பேத்தியை திருமணம் செய்திருக்கிறார். இவர் எப்படி மாவோயிஸ்டாக உருவானார்?
பொறியாளரான மிலிந்த், 1980களின் பிற்பகுதியிலும் 90களின் தொடக்கத்திலும் வெஸ்டர்ன் கோல்பீல்டு நிறுவன தொழிற்சங்கத்தில் தீவிரமாகப் போராடியவர்... அப்போது மகாராஷ்டிராவின் கட்சிரோலி உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டிருந்த மாவோயிஸ்டுகளுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது என்கிறார் கட்சிரோலி போலீஸ் அதிகாரி சாயூஸ் ஹக். மாவோயிஸ்டு சித்தாந்தவாதிகளான அனுராதா, கோபாட் ஆகியோர்தான் மிலிந்த் டெல்டும்ப்டேவுக்கு கம்யூனிச சித்தாந்தத்தை அறிமுகம் செய்து வைத்தனர். 1993ல் இருந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அம்பேத்கரின் சாதி ஒழிப்புக்கான செயல் திட்டங்கள் அரசியல் சாசனத்தில் இணைக்கப்படவில்லை... அவரது நில உரிமை பற்றிய பார்வைகளும் இணைக்கப்படவில்லை என்றார் அவர்.
இவர் மட்டுமல்ல... அம்பேத்கரின் பேரனாகிய நாடறிந்த பிரகாஷ் அம்பேத்கரும் கூட மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகவே பேசுகிறார்... "ஒரு சித்தாந்தத்தை பின்பற்றுவது என்பது கிரிமினல் குற்றம் அல்ல என்கிறது நீதிமன்றம்... அது வன்முறையாக உருவெடுக்கும்போதுதான் கிரிமினல் குற்றமாகிறது. அம்பேத்கரும் கூட வன்முறைப் பாதையை விரும்பியது அல்ல.. ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கையை வைத்திருந்தார்..."என்கிறார் பிரகாஷ் அம்பேத்கர்.. அண்மையில் மகாராஷ்டிராவில் நக்சல்கள் என முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்ட கபிர் கலா மஞ்ச் அமைப்பின் ஷீட்டர் சாதே, சச்சின் மாலி ஆகியோர் சரணடைவதில் முக்கியப் பங்காற்றியவர் பிரகாஷ் அம்பேத்கர் என்பதும் குறிப்பிட்த்தக்கது.
எல்லாமுமே வரலாறாகிவிடுகிறது!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications