ஜி.ஆர்.டி.தங்க நகைக்கடைகளில் வருமானவரித்துறை சோதனை
சென்னை: ஜி.ஆர்.டி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத்தில் உள்ள ஜி.ஆர்.டி தங்க நகைக்கடைகள் மற்றும் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகாரின்பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அட்சய திரிதியையொட்டி சென்னை உள்பட நாடு முழுவதும் நகைக்கடைகளில் நகைகளை வாங்கி பொதுமக்கள் குவிந்தனர்.
இதன் எதிரொலியாக, பெங்களூர், சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.ஆர்.டி நிறுவனத்திற்குச் சொந்தமான நகைக்கடையிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடந்து வருவதால் முக்கிய ஆவணங்கள் சிக்கும் என்றும் தெரிகிறது. சோதனை முடிந்த பிறகே இது பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும்.